ஊடகங்களின் வழி கல்வி கற்றல்
- 2020
- கட்டுரை
- By நா.ரெங்கலட்சுமி
நா.ரெங்கலட்சுமி
ஸ்ரீ.எஸ்.இராமசாமிநாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி,
சாத்தூர்.
Summary
இன்றைய காலக்கட்டத்தில் ஊடகத்தின் பங்கு இன்றியமையாதது. ஊடகங்களால் பல தீ;மைகள் உண்டு என்றாலும் அவற்றில் சில நன்மைகளும் உண்டு. தற்போது ஊடகங்களின் உதவியால் நாம் கல்வியை எளிதாக கற்க முடிகிறது. வகுப்பறையின் மூலம் கற்று வந்த கல்வியை இன்று ஊடகங்களின் வழியாக கற்பதற்கு ஏற்றவாறு நம் நாடு கணினி மற்றும் இணைய வளர்ச்சியில் முன்னேறிவிட்டது. அச்சு வழி ஊடகங்கள், மின்வழி ஊடகங்கள், மின்னணு ஊடகங்களின் வழியாக மாணவர்கள் கல்வியினை விரும்பியும் எளிமையாகவும் கற்கின்றனர்.அச்சு வழி ஊடகமான செய்திதாள்களும், பத்திரிகைகளும் மாணவர்களின் கல்விக்கு பெரிதும் உதவுகிறது. செய்திதாள்களில் அரசுத் தேர்வுகளுக்கான வினாவிடை, வங்கித் தேர்வு, பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்விற்கான வினாவிடையும் வெளியிடப்படுகிறது.