பன்னாட்டு கல்வியியல் மாநாடு- II
2020ஆம் ஆண்டு முதன் முதலில் தமிழ்நாட்டில் கல்வியியல் மாநாடு , ஓயிஸ்கா தமிழ்நாடு கிளை தமிழ் அநிதம் அமெரிக்கா, தமிழ் திறவூற்று மென்பொருள் குடும்பம் அமெரிக்கா, வல்லமை மின்னிதழ்,முத்துக்கமலம் மின்னிதழ் தி ஸ்டாண்டர்ட் ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி(த) சிவகாசி, பார்வதிஸ் கலை அறிவியல் கல்லூரி திண்டுக்கல், ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு நினைவு கல்லூரி, நாகூர் தமிழ் சங்கம் அனைவரும் இணைந்து நடத்தினர். அதைத் தொடர்ந்து 2021ம் ஆண்டில் இரண்டாவது கல்வியியல் மாநாட்டையும் இணைய வழி நடத்தவே முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு மாநாட்டின் பொருண்மை
“கல்வியியலில் இணையத்தின் ஆளுமை“.
ஓயிஸ்கா தமிழ்நாடு கிளை (இந்தியா)
தமிழ் அநிதம் (அமெரிக்கா) தமிழ்
திறவூற்று மென்பொருள் குடும்பம் (அமெரிக்கா)
பாரதி தமிழ்ச்சங்கம் பகரைன்
(வல்லமை மின்னிதழ்)
முத்துக்கமலம் மின்னிதழ்)
தி ஸ்டாண்டர்ட் ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி(த) சிவகாசி
பார்வதிஸ் கலை அறிவியல் கல்லூரி திண்டுக்கல்,
தமிழ் அநிதம் அறக்கட்டளை (இந்தியா)
நாகூர் தமிழ்ச்சங்கம்
மொழியியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்
கணித்தமிழ்ப் பேரவை G.T.N கலை அறிவியல் கல்லூரி
தமிழ் துறை, கணினி பயன்பாட்டியல் துறை கோயம்புத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
தமிழ்த்துறை சைவபானு சத்திரிய கல்லூரி அருப்புக்கோட்டை
ஆகிய அனைத்து நிறுவனங்களும் இணைந்து
இந்த ஆண்டு இரண்டாம் கல்வியியல் மாநாட்டை நடத்துகின்றன.
தமிழக, ஆசிரியப் பெருமக்களுக்காகவும், உலகமெங்கும் தமிழ் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்காகவும் கல்வித் தொழில்நுட்பத்தின் அவசியத்தையும் தமிழ் மொழி சார்ந்த திறவூற்றுக் கல்வித் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த மாநாட்டை ஆண்டு தோறும் நடத்த தென் தமிழக கல்வி நிறுவனங்கள் முடிவெடித்துள்ளன. இதன் மூலம் தமிழ் மாணவர்களுக்கு கல்வித் தொழில்நுட்பத்தை முறையாக கையாளக் கூடிய ஒரு பண்பையும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கிராமப்புற மாணவர்களுக்கு சுய வேலை வாய்ப்புக்களுக்கான ஒரு வசதியையும் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையில் இந்த மாநாடு கல்வியாளர்களால் கல்வியாளர்களுக்காக நடத்தப் படுகின்றது.
மாநாட்டிற்கு வரும் ஆய்வுக்கட்டுரைகள் இணையத்திலும் மின்னூலாகவும் வெளிவரும்.
Kalvīyīyal Mānāṭṭu Ayvukkōvai (Online)
ISSN 2767-0600
Kalvīyīyal Mānāṭṭu Ayvukkōvai (Print)
ISSN 2767-0597
மாநாடு பற்றிய அதிக விவரங்களுக்கு பேராசிரியர் காமாட்சிஆய்வுத் தகைஞர் , தமிழ் அறிஞர், இராபர்ட் கால்டுவெல் தமிழ் ஆய்விருக்கை தமிழ் பல்கலைக்கழம் அவர்களைத் தொடர்பு கொள்ளவும். பேராசிரியர் காமாட்சி தமிழ் அநிதம் செயலராகவும் செயலாற்றி வருகின்றார்.
மேலும் விவரங்களுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும்.