மாநாட்டிற்கு வரும் ஆய்வுக்கட்டுரைகள் இணையத்திலும் மின்னூலாகவும் வெளிவரும்.
Kalvīyīyal Mānāṭṭu Ayvukkōvai (Online)
ISSN 2767-0600
Kalvīyīyal Mānāṭṭu Ayvukkōvai (Print)
ISSN 2767-0597
பன்னாட்டு கல்வியியல் மாநாடு- III
பார்வதிஸ் கலை அறிவியல் கல்லூரி திண்டுக்கல்
2022ஆம் ஆண்டு மூன்றாம் கல்வியியல் மாநாட்டை தமிழ்நாட்டு கல்லூரிகளின் தமிழ் துறையும், கனினி பயன்பாட்டுத் துறைகளும் மேலும் உலகளாவிய தமிழ் மொழிக்கும், கணினித் தமிழுக்கும், மக்கள் வாழ்வியலுக்கும் உந்துகோலக இருக்கக்கூடிய பல்வேறு நிறுவனங்களும் இணைந்து திண்டுக்கல் பார்வதிஸ் கலை அறிவியல் கல்லூரியில் நேரடியாகவும் இணையம் வழியாகவும் நடத்தத் திட்டமிட்டுள்ளன.
இந்த ஆண்டு மாநாட்டின் பொருண்மை
“கற்பித்தலுக்கான தொழில்நுட்பங்கள்“.
தமிழ் அநிதம் (அமெரிக்கா) தமிழ்
பார்வதிஸ் கலை அறிவியல் கல்லூரி திண்டுக்கல்
மொழியியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்
ஓயிஸ்கா தமிழ்நாடு கிளை (இந்தியா)
திறவூற்று மென்பொருள் குடும்பம் (அமெரிக்கா)
பாரதி தமிழ்ச்சங்கம் பகரைன்
நாகூர் தமிழ்ச்சங்கம்
வல்லமை (மின்னிதழ்)
முத்துக்கமலம் (மின்னிதழ்)
தி ஸ்டாண்டர்ட் ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி(த) சிவகாசி
கணித்தமிழ்ப் பேரவை G.T.N கலை அறிவியல் கல்லூரி
தமிழ்த்துறை சைவபானு சத்திரிய கல்லூரி அருப்புக்கோட்டை
தமிழ் அநிதம் அறக்கட்டளை (இந்தியா)
ஆகிய அனைத்து நிறுவனங்களும் இணைந்து
இந்த ஆண்டு மூன்றாம் ஆண்டு கல்வியியல் மாநாட்டை நடத்துகின்றன.
தமிழக, ஆசிரியப் பெருமக்களுக்காகவும், உலகமெங்கும் தமிழ் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்காகவும் கல்வித் தொழில்நுட்பத்தின் அவசியத்தையும் தமிழ் மொழி சார்ந்த திறவூற்றுக் கல்வித் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த மாநாட்டை ஆண்டு தோறும் நடத்த தென் தமிழக கல்வி நிறுவனங்கள் முடிவெடித்துள்ளன. இதன் மூலம் தமிழ் மாணவர்களுக்கு கல்வித் தொழில்நுட்பத்தை முறையாக கையாளக் கூடிய ஒரு பண்பையும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கிராமப்புற மாணவர்களுக்கு சுய வேலை வாய்ப்புக்களுக்கான ஒரு வசதியையும் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையில் இந்த மாநாடு கல்வியாளர்களால் கல்வியாளர்களுக்காக நடத்தப் படுகின்றது.
பன்னாட்டு கல்வியியல் மாநாடு- III-விவரங்கள் அறிய
மாநாடு பற்றிய அதிக விவரங்களுக்கு,
மேலும் விவரங்களுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும்.