கணினித் தமிழும் பணி வாய்ப்புகளும்
அ.சாந்தி ராணி & முனைவர் சா. சுஜாதா
ஜி.டி.என் கலைக்கல்லூரி (தன்னாட்சி),
திண்டுக்கல்
Summary
உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளில் இணையத்தின் பயன்பாடு வளர்ந்து கொண்டிருக்கின்றது. அத்தகைய வளர்ச்சி தமிழ்மொழிக்கும் பொருத்தமானது ஆகும். முந்தைய காலத்தில் தமிழ்மொழியானது மாநில மொழியாக மட்டுமே வலம் வந்து கொண்டிருந்தது. இன்றைய காலக்கட்டத்தில் பல இடங்களில் பல நாடுகளில் பேச்சு மொழியாக மட்டுமின்றி ஆட்சி மொழியாகவும் மாற்றம் பெற்று வளர்ச்சி பெற்றதோடு மட்டுமல்லாமல் அலுவலக மொழியாகவும் உருப்பெற்று விளங்கிக் கொண்டிருக்கின்றது. இதன்வளர்ச்சியானது இணையத்தின் வாயிலாகவும் வளர ஆரம்பித்துள்ளது. இணையத்தில் தமிழ் மொழியானது உருவாக வேண்டுமாயின் தமிழுக்கான எழுத்துருக்கள் தேவை என்ற போதிலும் அதை உருவாக்குவதிலும் வெற்றி பெற்று ஆட்சிசெய்து கொண்டிருக்கின்றது. முந்தைய காலத்தில் ஆங்கில குறியீட்டு முறையில் பயன்படுத்தப்பட்டு வந்த கணினிகள் இன்று தாய்மொழியிலும் பயன்படுத்த வேண்டும் என்றும் வணிகத்திற்கு அது உதவியாக மாற வேண்டும் என்றும் பல அறிஞர்கள் முயற்சி எடுத்து வந்துள்ளனர்.
தமிழ்மொழியானது இணையத்தில் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துள்ளதை இதன் மூலம் அறிய முடிகின்றது. எங்கும் தமிழாகவும் எதிலும் தமிழாகவும் மாற்றம் பெற்ற காரணத்தால் இன்றைய வேலைவாய்ப்புத் தேடல்களும் அதிகமாகின்றது. அதிகமான துறைத் தேர்வுகளிலும் இன்று தமிழ் மொழி பயின்ற மற்றும் தமிழ் தட்டச்சு தெரிந்தவர்களுக்கே அதிக முன்னுரிமை வழங்கப்படுகின்றது. இதைக் கருத்தில் கொண்டு இன்றைய இளம் தலைமுறையினரும் கணினித் தமிழில் பயிற்சி பெற்று வேலை வாய்ப்பிற்காக தங்களை தயார்படுத்தி முன்னேறிக் கொண்டு இருப்பதை அறிவதாக இக்கட்டுரை அமைகின்றது.
திறவுச்சொற்கள்: இணையம், வலைபூக்கள்,தொழில்நுட்பம், கணினித்தமிழ்