கணிப்பொறியில் தமிழ்
- 2024
- கட்டுரை
- By முனைவர் கி. சாந்தினி
முனைவர் கி. சாந்தினி
ஜி. டி. என் கலைக் கல்லூரிதிண்டுக்கல்.
Summary
மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஈடுகொடுத்துத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் ஆற்றல் எந்த மொழிக்கு இல்லையோ, அந்த மொழி காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விடும். எத்தனை புதிய தொழில் நுட்பங்கள் வந்தாலும் அவை அனைத்தையும் தன்வயப்படுத்திக் கொண்டு தன்னிலை மாறாது, வாழும் மொழியாகப் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருவது நமது செந்தமிழ்.
“ பிறநாட்டு நல்லறிஞர் சரித்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புது நூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்.”
என நம் முன்னோடிக் கவிஞர் கூறியபடி, இருபதாம் நுாற்றாண்டின் இணையற்ற மனிதக் கண்டுபிடிப்பான கணிப்பொறியில் தமிழ் வளர்ச்சிநிலையை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகிறது.
இந்தியாவிற்கு வெளியே, இலங்கை அரசு தனது இணைய சேவை முழுவதும் தமிழில் வழங்குகிறது. சிங்கப்புர் அரசு தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தை தமிழில் இயக்கவில்லை எனினும், அனைத்து அரசு சேவைகளைத் தமிழிலும் வழங்கி வருகின்றது.







