தமிழரின் பண்பாடும்,கணினிப் பயன்பாடும் - ஓர் ஒப்புமை
- 2021
- கட்டுரை
- By முனைவர் ப.கலைவாணி
முனைவர் ப.கலைவாணி
பார்வதீஸ் கலை அறிவியல் கல்லூரி, திண்டுக்கல்
Summary
பண்டையத் தமிழரின் வாழ்க்கை முறையே பண்பட்ட வாழ்க்கை முறையாகும். பன்னெடுங்காலமாக சமூகத்தில் மக்கள் வாழ்ந்த வாழ்வு முறையினைக் காணப்படுவதே பண்பாடாகும். அத்தகைய தமிழரின் பண்புமிக்க மரபினை, வாழ்க்கை முறையினை இலக்கிய, இலக்கணங்களின் வாயிலாக நாம் அறி;ந்து கொள்ள முடிகிறது. தற்போது காலமாற்றங்களால் மக்களின் நாகரீக வாழ்க்கை முறையில் நம் பண்பாடானது உணவு முறை, கல்விமுறை, பழக்கவழக்கங்கள் போன்றவற்றிலிருந்து சற்று மாற்றமடைந்து வந்துள்ளதைக் காணமுடிகின்றது. பல நிலைகளில் உடல் உழைப்பை மட்டுமே கொடுத்து உயர்ந்த மனித இனம் இன்று தனது அறிவின் தொழில்நுட்பத்தால் உடல் உழைப்பின்றி இயந்திரத்தின் வாயிலாகவே தனது வேலைகளை எளிமையாக்கிக் கொண்டு வாழ பழகிவிட்டனர். அவ்வாறு மனிதர்களின் பயன்பாட்டு கருவிகளுள் ஒன்றாக இன்று அதிகளவு உலகத்தனைவரும் பயன்படுத்தும் தொழில்நுட்ப சாதனமான கணினிப் பயன்படுவது நிதர்சனமே. நாம் வாழும் வாழ்க்கை முறையோடு கணினியும் எவ்வாறு மனிதனோடு இணைந்து ஒன்றாக இயங்கி கொண்டு வருவதை இக்கட்டுரையின் வழி ஆயலாம்.