தமிழ் மொழி வளர்ச்சியில் கணிணித்தொழில் நுட்பங்கள்

நெறியாளர் முனைவர். ச. மாசிலாதேவி & ஞா.யோசுவா

உதவிப் பேராசிரியர்,உயராய்வு மையம் தமிழ்த்துறை & பகுதிநேர முனைவர்பட்ட ஆய்வாளர்

ஜி.டி.என்,கலைக்கல்லூரி(தன்னாட்சி)

திண்டுக்கல்.

Summary

ஆறறிவு படைத்த மனிதர்களின் படைப்புகள் பல் துறைகளில் நாளும் வளர்ந்து வருகின்றன. அந்த வகையில் மற்றுமொரு படைப்பாய் வீறு கொண்டு வளர்ந்து வருகிறது செயற்கை நுண்ணறிவு. உணர்ச்சியில் ஆறறிவும், செயற்கை நுண்ணறிவும் வேறுபட்டு இருந்தாலும் அவை இரண்டும் ஆற்றும் பணி ஒன்று தான். ஆனால் மனிதர்கள் ஆற்றிவரும் பணி அனைத்தையும் செயற்கை நுண்ணறிவால் செய்துவிட முடியாது. சில சமயங்களில் செயற்கை நுண்ணறிவின் பணி அறிவுசார்ந்து இருந்தாலும் அவை மனித நுண்ணறிவுக்கு இணையாக இருந்துவிட முடியாது.

குறிப்பாக கற்பித்தல் பணியில் செயற்கை நுண்ணறிவின் பணி மகத்தானதாக உள்ளது. தமிழ் கற்றல் கற்பித்தலில் தகவல் தொடர்புத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள் பலவாகும். மாணவர்களிடம் கற்றலை எளிமையாக்கவும், மேம்படுத்தவும் தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டியதாகிறது. இன்றைய மாணவர்கள் தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.பலர் சிறந்த தேர்ச்சிப் பெற்றவர்களாகவும் விளங்குகிறார்கள். அதனால் அவர்களிடம் தகவல் தொடர்புத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தித் தமிழைக் கற்பிக்கும் போது கற்றல் எளிமையாகிறது, இனிமையாகிறது.

மேலும் மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே தகவல் தொடர்புத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஆசிரியர்களுடன் தொடர்புகொண்டு பாடங்களைக் கற்க இச்சாதனங்கள் பயனளிக்கின்றன. இத்தகவல் தொடர்புத் தொழில் நுட்பம் மனவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உறவுப் பலமாகிறது. எனவே, தமிழ்வளர்ச்சியில் கணிணி தொழில்நுட்பத்தின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் அறிந்துகொள்ளும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.

முன்னுரை;
மிகக்குறைந்த தகவல்களுடன் விரைவாகக் கற்றக் கொள்வதில் இயந்திரக் கற்றல் மாதிரிகளை விட மனிதர்கள் மிகவும் திறமையானவர்கள். மனித மூளையின் சிறப்புத் திறனான மொழித்திறனை வளர்த்தெடுக்க மனித சமுதாயம் தொடர்ந்து முயன்று வந்துள்ளது. அதன் பயனே இயற்கை மொழிகளுக்கான வரிவடிவங்கள். மொழியின் எழுத்து வடிவம் என்பது மனிதன் உருவாக்கிய முதல் தொழில்நுட்பமாகும். தனது கருத்துக்களைக் காலம் கடந்து, இடம் கடந்து நிலைத்து வைக்க மனித சமுதாயம் உருவாக்கிய தொழில்நுட்பம் எழுத்து மொழி.

“மரப்பட்டை அதனை இடை அணிந்து
உச்சியில் ஓர் குடிமிட்டு
கொட்டிச் சொன்ன காலம்மாறி
தட்டிட கைகள் வலித்தாலும்
சட்டென கேட்டதை தந்திடுமே கணினி
இணையம் என்ற ஒன்றுண்டு
இணையே இல்லை இனிதுண்டு
தந்திடும் தகவல் பல பலவே
கற்றல் செய்யும் மாணாக்கருக்கும்
கற்பிக்கும் ஆசிரிய பெருந்தகைக்கும்!”

ஓலைச்சுவடியில் பயணத்தைத் தெடங்கி கல்வெட்டில் வளர்ந்து, அச்சில் மலர்ந்து இன்று கணிணியோடு கைகோர்த்து சென்று கொண்டிருக்கிறதை பார்க்கும் பொழுது தமிழ் தடைகளை உடைத்து பல தடங்களை பதித்தள்ளது. காலத்தின் கையில் அகப்பட்டுவிடாமல் தொல்காப்பியம் முதல் கீழடி கூறும் தமிழ் வரை தமிழின் தடங்களை அறியமுடியும். அளப்பரிய தன்மையதாய்த் தகவல் தொழில்நுட்பமும் வளர்ந்துள்ளது. தகவல் தொடர்பு கோட்பாடுகளும் வகைமைகளும் பலவாறாக பெருகியுள்ளன. அவற்றிற்கு ஈடுகொடுக்குமாறு புதுப்புது அறிவியல் கருவிகள் வடிவமைக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. 

18ம் நூற்றாண்டு தொடங்கிய ரூஸோவின் கல்வியல் புதுமைக் கோட்பாடு மேன்மேலும் புதுப்பிக்கப்பட்டுக் கற்பிப்பு முறைகள் வகுக்கப்பட்டன.அவற்றோடு அறிவியல் இணைந்து கல்வியில் தொழில்நுட்பம் எனும் புதிய துறையினைக் கல்வியல் துறைக்குத் தந்தது, கற்பிப்பில் மேற்கொள்ளப்பெறும் முறைகளும் அவற்றால் கற்றல் விளைவுகளை மேம்படுத்தும் கல்வியில் தொழில்நுட்பம் கல்வியில் இன்றைய எழுச்சியாகக் கருதப்படுகின்றன. இந்த எழுச்சியில் இருபதாம் நூற்றாண்டின் நிறைவு ஆண்டுகளில்; வளர்ந்தோங்கிய கணிப்பொறித் தகவல் தொழில்நுட்பம் பெறும் பங்கு வகிக்கிறது. ‘கல்வி கரையில என்பது போலக், கற்பிப்பு முறைகளும் எண்ணில’ கற்பிப்பு முறைகளுள் சிறப்பானவற்றையும் நடைமுறைக்கு உகந்தவற்றையும் விளக்குதே இக்கட்டுரையின் நோக்கமாகும். 

கன்னித்தமிழும் கணினித்தமிழும்:
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் கணினியில் தமிழை உள்ளீடு செய்வதற்கே வசதி கிடையாது. தமிழ் எழுத்துருக்கள், விசைப்பலகைகள் உருவாக்கப்படவில்லை. முதலில் தமிழை உள்ளீடு செய்வதற்கு வசதிகள் உருவாக்கப்பட்டால்தான் பிற பயன்பாடுகள் எண்ணிப்பார்க்க முடியும். பின்னர் மெல்லத் தமிழ் உரையை ரோமன் எழுத்துக்களில் உள்ளீடு செய்து, அதைத் தமிழ் எழுத்துருக்களில் மாற்றும் வசதி உருவாக்கப்பட்டது.
அச்சு ஏறிய கன்னித்தமிழ் கணினியிலும் தடம் கண்டது. இது இன்றைக்கு அறிவியல் வளர்ச்சியோடு தளர்ச்சியில்லாமல் பயனிக்கின்ற தகுதியும் ஆற்றலும் தமிழுக்கே உண்டு அறிவியல் உச்சமான செயற்கை நுண்ணறிவு என்ற துறையிலும் பயனிக்கின்ற பக்குவம் தமிழ் மொழிக்கே உண்டு என்பதில் மிகையல்ல. உயிர்களின் பரிணாம வளர்ச்சியை அறிவியல் அகமாயினும், புறமாயினும் அவற்றினூடே அறிவியல் விதையைத் தூவியுள்ளனர். “வளவன் ஏவா வான ஊர்தியையும்” கோள்களின் இயக்கத்தையும் காட்டும் புறமும், அண்டங்களைப் பற்றிப் பேசும் பதிற்றுப்பத்தும், வானசாஸ்த்திர அறிவினை வெளிப்படுத்திக்காட்டும், நீதி இலக்கியங்களும் பல்வேறு இடங்களில் அறிவியல் கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
கணினியின் பயன்பாடு இன்றைய உலகில் பெரிதும் தேவையாக உள்ளது. கல்வியிலும் கணினியின் செல்வாக்கு அதிகமாக உள்ளது. தமிழ் எழுத்துக்களை வடிவமைத்தலிலும் இலக்கணப் பிழை, எழுத்துப்பிழை போன்றவற்றைத் திருத்தவும், கணினி அச்சுத்துறையில் வளர்ச்சி பெற்றுள்ளது. உலக மொழகள் அனைத்திற்கும் யுனிகோட் என்ற பொதுவான எழுத்து குறியாக்க முறை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிக்கு 128 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் யுனிக்கோட் முறையில் சில குறைபாடுகளும் உள்ளன. 

தடைகள் தாண்டிய தடங்கள்:
அமிழ்தினு மினியவளே! அகம் புறமறிந்தவளே! நல் 
அறம் பொருளின்பம் வீடுயாவும் அருள்பவளே! அன்னையே! 
இமிழ்கடல் கடந்து இயலிசை நாடகமாய் திகழ்ந்து! மகிழ்ந்து! 
எத்திக்கும் புகழ்மணக்கும் தித்திக்கும் தமிழ்! 
இனிக்கப் பிறந்தவளே! தமிழே! 

ஓலைச்சுவடியில் ஓயாது உயிர்பித்து இருந்த தமிழ் கலங்காது கல்வெட்டில் காலெடுத்து வைத்து காலமெல்லாம் காத்திருந்து அச்சமில்லாது அச்சேறி கலங்காது கணினியோடு கைகோர்த்து காலமெல்லாம் தடம் பதித்து வந்தது தமிழ். 

கணினியின் அவசியம்:
கல்வெட்டு, ஓலைச்சுவடி, தட்டச்சு, கணினி ஆகியவற்றில் இதுவரை நாம் பார்த்த தமிழ் மொழித் தொழில்நுட்பமானது தமிழ் உரை அல்லது பனுவலை அவற்றில் பொதிந்து அல்லது வைக்கப் பயன்பட்ட தொழில்நுட்பமே, காலம் கடந்து, இடம் கடந்து, தமிழ் பனுவல்களைச் சேமித்து வைக்கப் பயன்பட்டது மொழித் தொழில்நுட்பமே. கல்வெட்டாலோ ஓலைச்சுவடியாலோ அச்சாலோ தங்கள் வழி தங்கள் மீது பதியப்பட்ட தமிழ்ப் பனுபலை, உரையை புரிந்து கொள்ள முடியாது. பதியப்பட்டவற்றைப் பாதுகாப்பாகச் சேமித்து மட்டுமே வைக்க முடியும்.

பத்து கைகள் இருந்தாலும் சாத்தியப்படாத வேலைகளை நிமிடங்களில் முடித்துத் தரக்கூடிய கணினி இன்றைய அவசரயுகத்தில் ஒரு வரப்பிரசாதம். கண்மூடித்திறக்கும் நேரத்தில் கச்சிதமாகச் செய்துமுடித்துக் கொடுக்கும் ஆற்றல் கணினிக்கும் உண்டு. சட்டைப்பையிலேயே பாக்கெட் அளவு கணினி வைத்திருக்கும் காலம்,இது சூரியனைப் பற்றியும் சூரியனுக்குக் கீழுள்ள அத்தனை செய்திகளையும் தெரிந்து, பாடங்களாக படிக்க, படங்களை பார்க்க, படித்ததையும் சேமித்துவைக்க புதிய டிசைன்களை உருவாக்க கடிதங்கள் எழுத இப்படி நம் வாழ்கைக்குக் கூடுதலான வசதிப் பெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள அடிப்படை 

கணினி அறிவு என்பது அத்யாவசியத் தேவை:
அதிவேக இயந்திரத்தனமான இன்றைய வாழ்க்கைச் சூழலில் அதிகம் பேர் சொல்லக்கூடிய ஒரு வார்த்தை நேரமே இல்லை என்பதுதான், ஒவ்வொரு நாளும் ஓட்டமும் நடையுமாக கரைகிறது. நித்தம் நித்தம் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் முடிக்க வேண்டிய பணிகள் கண்டுபிடிப்புகளில் மகத்தானவையான எலக்ட்ரானிக் கருவிகள் அந்த வரிசையில் இன்று முன்னிலையில் உள்ளது லேப்டாப், பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவர்கள், பொறியியல் மற்றும் மருத்துவம் படிக்கும் மாணவர்கள், லேப்டாப், கம்யூட்டர் ஒன்று தங்களுக்கென இருப்பது மிகவும் முக்கியம் என்று என்று எண்ணுகின்றனர்.ஞானமே இல்லாதவர்கள் கூட எளிதாக லேலப்டாப்பை பயன்படுத்தலாம். 
கண்களால் அல்லது கனவில் பார்த்த பொருட்களை உருவாக்கி கொள்ளலாம். உருவாக்கிய பொருட்களுக்கான அசைவினைக் கொடுக்கலாம். இளைஙர்கள் முதல் சிறுவர்கள் வரை சுண்டியிழுக்கின்ற கேம்ஸ்கள் மற்றும் செல்போன் கேம்ஸ்களை உருவாக்கிக் கொள்ளலாம். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குத் தேவைப்படும் பாடத்திட்டங்களுக்கு அனிமேஷன் வடிவம் தரலாம். குழந்தைகளுக்கான நர்சரி ரைம்ஸ்களை உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் அனைவரும் கணினியில் உள்ள விளையாட்டிற்கு அடிமையாகிவிடக்கூடாது என்பதை அனைவரும் உணரவேண்டும். 

தமிழ் மொழி வளர்ச்சியில் கணினி:
தமிழ் மொழி வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க ஒன்று தமிழ் அகராதியாகும். வையாபுரிப் பிள்ளையின் தலைமையில் முதல் தமிழ் அகராதி தோற்றம் பற்றியது, அன்று முதல் இன்றுவரை தமிழ் அகராதிகள் தோன்றிய வண்ணமே உள்ளன. அகராதிகள் அச்சிடப்பட்டு நூலாக வெளிவருகின்றன. அதே போல் மின்பதிப்பாக கனிப்பொறியில் இடம்பெறும் அகராதி மின் அகராதி எனப்படுகிறது. இது இணையத்தில் கிடைப்பதால் இணைய அகராதி எனப்படுகிறது. இவ்வாறு உருவான இணைய அகராதியே சிறிய அகராதியாகும். இதில் எழுத்து, சொல், இலக்கன வகை, இணைச்சொல், எதிர்ச்சொல் என்று பல வகைகளிலும் தேடிப்பெறும் வசதியைக் கொண்டிருப்பதால் தமிழ் மாணவர்களின் எதிர்பார்ப்பை நிரைவுசெய்வதாக உள்ளது. 
இலக்கண நூல்களும் இன்றைய மொழியியல் ஆய்வுகளும் மனித மூளைக்காக உருவாக்கப்பட்டவை. அவற்றை அப்படியே கணினிக்குக் கொடுத்தால் கணினியால் புரிந்துகொள்ள முடியாது. கணினியில் அமைந்துள்ள மின்னணுச் சில்லுகளுக்குப் புரியக்கூடிய கணினிநிரல்களாக அவை மாற்றப்பட வேண்டும். தமிழ் அகராதிகள் எல்லாம் கணினிக்குப் புரியக்கூடிய வகையில் மின்னகராதிகளாக மாற்றப்பட வேண்டும்.

சமுதாயத்தில் சமூக வலைதளங்கள்:
இது மக்களுக்காக புழக்கத்தில் வந்தது 1990களில் தான் 2004ல் கண்டுபிடிக்கப்பட்ட ‘பேஸ்புக்’ 2006ல் ‘டுவிட்டர்’ பின்னர் வந்த அலைபேசி வழி ‘வாட்ஸ் ஆப்’ என அனைத்துமே அசுர வளர்ச்சி பெற்றது. 

“விளக்கெரியும் குடிசையிலும் 
இருபதுரூபாய் நெட்கார்டு தாங்கன்னே” 

என்று வாங்கிப்போய் அதில் மாய உலகில் கனாக்கானும் அளவிற்கு வளர்ந்துள்ளது. பல்வேறு சமூக வலைதளங்கள் இருப்பினும் சில குறிப்பிட்ட வலைதலங்களில் மட்டுமே பயனாளிகளின் எண்ணிக்கையும்,ஆர்வமும் அதிகமாக உள்ளன. பேஸ்புக், டுவிட்டர், லிங்க்டு ன், மை ஸ்பேஸ், டேக்டு, மை இயர் புக், யூ டியூப், போன்ற சமூக வலைதளங்கள் இன்றும் பெறுமளவில் அனைவராலும் அறியப்படுகின்றனவையாக உள்ளன. இவற்றில் முகநூல் எனப்படுகின்ற பேஸ்புக், மற்றும் டுவிட்டர் ஆகியவை மிகவும் பிரபலமான வலைதலங்களாகும். கணினியில் மட்டுமன்றி இப்போது ஸ்மாட்போன் என்ற நவீன வசதிகளுடன் கூடிய அலைபேசிகளிலும் இணையத்தின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளன. கல்லூரி மாணவர்களிடம் இந்த ஸ்மாட்போன்கள் பெருமளவில் புழக்கத்தில் உள்ளன.பிற சமூக வலைதளங்களில் சுமார் 50 கோடிக்கும் அதிகமானோரும் உருப்பினராக உள்ளனர். என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். நாம் மனத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு சூழ்நிலையின் உண்மை நிலையைப் பற்றி கவலைப்படுவதில்லை. தன் தேவைகளைப் பூர்த்தி செய்யப்படுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொள்ளாமல் அறிவுசார்ந்த மற்றும் மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் யாரையும் பாதிக்காத வகையில் வலைதளங்களின் பயன்பாடு மற்றும் பயன்படுத்தும் விதம் அமையவேண்டும் என்பது இக்கட்டுரையின் மையக் கருத்தாகும். 

கற்றல்-கற்பித்தல் பணியில் தகவல் தொடர்பு:
அறிவின் ஆற்றல் அண்டத்தை அளக்கும்! இன்றைய
அறிவியல் விந்தை அனுவையும் பிளக்கும்!
தெரியாததைத் தெரிவிப்பதும் திருந்தச்செய்வதும் கல்வி!
தேனினுமினிய தௌ;ளு தமிழை அள்ளிப் பருகிடு செல்வி!

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் தமிழ்மொழி கற்றலுக்கான தேவை அதிகரித்து வருகிறது. செழுமையான இலக்கியம் மற்றும் கலாச்சார பாரம்பரியம் காரணமாக பல மாணவர்கள் தமிழை இரண்டாம் மொழியாக கற்க ஆர்வம் காட்டுகின்றனர். தொழில் நுட்பத்தின் வருகையால் தமிழ் மொழியைக் கற்பிப்பதற்கும் கற்பதற்குமான வளங்கள் அனுகக்கூடியதாகிவிட்டன. தமிழ் மொழிப்படிப்புகள் மற்றும் மின்புத்தகங்கள் போன்ற ஆன்லைன் ஆதாரங்கள் உலகம் முழுவதும் உள்ள கற்பவர்களுக்கு கிடைக்கின்றன. 

கனவு கண்டவிஞ்ஞானிகள்!- வாழ்வில் 
கண்டறிந்த சாதனைகள் ஏராளம்! ஏராளம்! 
கனவுகள் யாவும்நனவாகி இன்று கைபேசி, கணினியம் 
காவியமாய் ஓவியமாய் இயங்குதே ஏராளம்! தாராளம்! தூராளம்! 

கற்றல் கற்பித்தல் மற்றும் கற்றலை மேம்படுத்த நுட்பத்தைப் பயன்படுத்தலாம். மொழி கற்றல் மென்பொருள் ஆன்லைன் மொழி பரிமாற்ற திட்டங்கள் மற்றும் மொழி கற்றல் பயன்பாடுகள் கற்பவர்களுக்கு தமிழில் பயிற்சி மற்றும் தொடர்புகொள்ள அதிக வாய்ப்புகளை வழங்கமுடியும். மாணவரகளின் செழுமையான பண்பாட்டு பாரம்பரியத்தை புரிந்து கொள்வதற்கும் மாணவர்களை அவர்களின் வேர்களோடு இணைக்கவும் பாராட்டவும், பாதுகாக்கவும் பொறியியல் படிப்பின் ஒரு பகுதியாக இருக்கிறது. 

முடிவுரை:
படைப்பின் தலைவன் இறைவனடா –அவன் 
படைப்பினை எண்ணிப் பார்த்திடடா! 
கிடைத்தற்கரிய மனிதப்பேற்றை – கணிணியால் 
கீழ்த்தர மாக்கிட வேண்டாமடா! 
கணினி மனிதனின் படைப்பில் சிகரமடா - இதை 
சரியாக பயன்படுத்தாதவன் வாழ்வு நரகமடா! 

சமூக வலைதலங்களைப் பயன்படுத்துபவர்கள் அதில் உள்ள நன்மை தீமைகளை அறிந்து அளவோடு பயன்படுத்தினால் இது போன்ற குற்றங்களைக் குறைக்க இயலும். குறிப்பாக பெண்கள் புத்திசாலித்தனமாகவும் சற்று விழிப்போடும் பயன்படுத்துவது நன்மை பயக்கும். 

“அறியாமை இருளை அகற்றி அறிவையே ஒளியென்று ஏற்றி! 
அன்பையே வழியென்று காட்டிட பூமியை வாழவிடு! 

ஆறிவினாற்றல் அண்டத்தையளக்கும் 
என்ற வரிகளுக்கிணங்க நாம் சோதனைகளை சாதனைகளாக்கி சரித்திரம் படைத்திட கணினியை நன்முறையில் பயன்படுத்தி பயன்பெறுவோம். 

“அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லை 
அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை 
அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு 
அளைகின்றமைறை றுகள் தாமே” (திருமந்திரம்-2358) 

ஞானத்திற்கு அழவொ தோற்றமோ கிடையாது. ஞானத்தை வேறு பொருள் கொண்டு நிரூபணம் செய்யமுடியாது, ஞானத்திற்கு ஆதாரமாக இருப்பது ஞானமே இத்தகைய ஞானத்தை நல்வழியில் பயன்படுத்துவோம். 

இன்று மின்தமிழ் வளர்ச்சியில் தமிழை உள்ளீடு செய்வதற்கான பணிகள் பெருமளவில் வெற்றிபெற்றுள்ளன. தமிழ் எழுத்துருக்கள், விசைப்பலகைகள் உருவாக்கத்தில் பல சிக்கல்கள் தீர்க்கப்பட்டுவிட்டன. அதையொட்டி தமிழ் விக்கிபீடியா, வலைபூக்கள், இணையதளங்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன. இவையெல்லாம், வரவேற்கத்தக்க தமிழ்ப்பணிகள். ஆனால் இவையெல்லாம் கணினித்தமிழ் வளர்ச்சியின் முதல்கட்டமே ஆகும். எனவே அடுத்தகட்ட வளர்ச்சியின் முனைப்பாக மொழித் தொழில்நுட்பத்தை நோக்கி நம் பணி அமையப்பெற்று மொழிச் சாதனையில் முன்னேற்றத்தைக் காணவேண்டும்.


தமிழுக்கு இணை தமிழே
Author
கட்டுரையாளர்

நெறியாளர் முனைவர். ச. மாசிலாதேவி & ஞா.யோசுவா

உதவிப் பேராசிரியர்,உயராய்வு மையம் தமிழ்த்துறை & பகுதிநேர முனைவர்பட்ட ஆய்வாளர்

ஜி.டி.என்,கலைக்கல்லூரி(தன்னாட்சி)

திண்டுக்கல்.