தமிழ் மொழி வளர்ச்சியில் மென்பொருட்களின் பங்கு
- 2024
- கட்டுரை
- By முனைவர் ஜெ.சவிதா
முனைவர் ஜெ.சவிதா
ஜி.டி.என்.கலைக்கல்லூரி,
திண்டுக்கல் - 5.
Summary
அறிவியல் உலகில் மனிதன் கண்டுபிடித்த மிகப் பெரிய அரிய கண்டுபிடிப்பு கணினி. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது கணினியே ஆகும். மனிதனின் மூளையைப் போன்று அதிவேக நுண்ணறிவுடன் செயல்படக்கூடியது. இன்றைய உலகில் எல்லா துறைகளிலும் கணினியின் தேவை இன்றியமையாதது. கணினி இல்லையென்றால். இந்த உலகம் இயங்காது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. தற்போது கணினியில் ஏராளமான உலக மொழிகள் மிக எளிதாக செயல்படும் அளவிற்குத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இந்திய மொழிகளுள் ஒன்றும் உலகளவிலான ஆறு செம்மொழிகளுள் ஒன்றுமான நமது தமிழ்மொழியும் கணினி தொழில்நுட்பத்தில் தனக்கான இடத்தைப் பெற்றுள்ளது. கணினி தொழில் நுட்பம் என்ற டிஜிட்டல் டெக்னாலஜி பயன்படுத்துகின்ற பல்வேறு தளங்களிலும் தேவையான வடிவங்களில் தமிழ் மொழியும் மாற்றம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.