தமிழ்மொழி வளர்ச்சியில் தமிழ் மென்பொருள்களின் பங்கு
- 2024
- கட்டுரை
- By முனைவர் த.சங்கரன்
முனைவர் த.சங்கரன்
சத்ய சாய் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி,
பாசார், வேப்பூர், கடலூர் மாவட்டம்.
Summary
While the Tamil language was a classical language with a rich variety of art, music and drama, Now a days fourth Tamil has emerged and is growing and developing the Tamil language. Today Kaninthamil is emerging and growing as the fourth Tamil. It is no exaggeration to say that today scientific discovery is developing not only human life but also language. Tamil has reached various stages of development like Tamil application software, Tamil Mobile Application in computer since the introduction of Tamil font in the computer. This article explains the development achieved through Tamil software in Tamil language.
Keywords: Software, Application Software, Tamil Font, Tamil Software, Tamil Keyboard, Mobile Application)
ஆய்வுச்சுருக்கம்:
தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் வகைமையைக் கொண்ட செவ்வியல் மொழியாக விளங்கிவந்த நிலையில் இன்று நான்காவதாக ஒரு தமிழ் உருபெற்று வளர்ந்து தமிழ் மொழியை வளர்த்து வருகின்றது. இன்று கணினித்தமிழ் நான்காம் தமிழாக உருபெற்று வளர்ந்து வருகின்றது. இன்று அறிவியல் கண்டுபிடிப்பு மனிதவாழ்வினை மட்டும் அல்லாமல் மொழியையும் வளர்த்து வருகின்றது என்றால் அது மிகையாகாது. கணினியில் தமிழ் எழுத்துரு உள்ளீடு செய்யப்பட்ட முதல் இன்று கணினியில் தமிழ் பயன்பாட்டு மென்பொருள்கள், தமிழ் இலக்கண இலக்கிய மென்பொருள்கள், இணையப்பயன்பாடுகள், தமிழ் குறுஞ்செயலிகள் என தமிழ்மொழி பல்வேறு வளர்ச்சிநிலைகளை அடைந்துள்ளது. தமிழ்மொழி தமிழ் மென்பொருள்கள் மூலம் அடைந்துள்ள வளர்ச்சியை விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.
குறிச்சொற்கள்: மென்பொருள், பயன்பாட்டு மென்பொருள், தமிழ் எழுத்துருக்கள், தமிழ் மென்பொருள்கள், தமிழ் விசைப்பலகை, குறுஞ்செயலிகள்)
- தமிழ் பயன்பாட்டு மென்பொருள்கள்
- தமிழ் இலக்கண மற்றும் இலக்கிய மென்பொருள்கள்
- தமிழ் குறுஞ்செயலிகள்
- தமிழ் பயன்பாட்டு மென்பொருள்கள்
- தமிழ் தட்டச்சு மென்பொருள்கள்
- எழுத்துரு குறியீட்டு மென்பொருள்கள்
- பிழை திருத்தி மென்பொருள்கள்
- சந்திப்பிழை திருத்தி மென்பொருள்கள்
- ஒளியுறு எழுத்துக்குறி – உணர்வு மென்பொருள்கள்
- உரையிலிருந்து பேச்சு – மாற்றி மென்பொருள்கள்
- இயந்திர மொழிபெயர்ப்பு மென்பொருள்கள்
- சென்னையில் உள்ள வள்ளி மென்பொருள் நிறுவனத்தினர் 2000ஆம் ஆண்டு ‘கதம்பம்’ என்னும் தமிழ் பயன்பாட்டு மென்பொருளை வெளியிட்டனர்.
- சென்னையில் உள்ள பனேசியா என்ற மென்பொருள் நிறுவனம் இதுவரை பதினொன்று இலவச தமிழ் மென்பொருள்களை ‘தமிழ் கம்ப்யூட்டர்’ இதழுடன் வெளியிட்டது.
- பெங்களூரைச் சேர்ந்த ‘சாஃப்ட்வேர் ரிசர்ச் குரூப்’ என்ற நிறுவனம் ‘டாஸ்’ இயங்குதளத்தில் இயங்கக் கூடிய ‘பாரதி தமிழ் சொற்செயலி’யை வெளியிட்டது. தமிழில் வெளிவந்த முதல் தமிழ் சொற்செயலி இதுவாகும்.
- சென்னையிலுள்ள ‘சாஃப்ட்வீயூ’ நிறுவனம் ‘அமுதம்’ என்ற மென்பொருளை தயாரித்து வெளியிட்டது. தமிழ்நாடு அரசால் தரப்பட்டுள்ள தமிழ் 99 விசைப்பலகை அச்சுமுறையை இம்மென்பொருள் கொண்டுள்ளது.
- இயக்க முறைமையின் ஆணைகள், பட்டியல்கள் ஆகியன தமிழில் தெரியும் பொருட்டு உருவாக்கப்பட்ட மென்பொருள் ‘இதம் 2000’ என்பதாகும்.
- 2005ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் மொழி வளர்ச்சித்துறையும், தமிழ்நாடு அரசும் இணைந்து ‘தமிழ் மென்பொருள் கருவிகள்’ என்னும் தொகுப்பை வெளியிட்டனர். இதில் தமிழில் கணினியைப் பயன்படுத்தும் மென்பொருள்களும், 250 தமிழ் எழுத்துருக்களும், விசைப்பலகை இயக்கிகளும் அடங்கியுள்ளன.
- மும்பை சி.கே. டேக்னாலஜி நிறுவனத்தால் நவம்பர் 2010ஆம் ஆண்டு ‘சக்தி ஆபீஸ்’ என்னும் மென்பொருள் வெளியிடப்பட்டது. மைக்ரோசாஃப்ட் ஆபீஸில் உள்ளதைப்போன்று அனைத்தும் ஆனால் தமிழில் வடிவமைக்கப்பட்ட மென்பொருளாகும்.
- இவற்றைப்போன்று ‘எழுத்தாணி’, ‘தமிழ் தட்டச்சுத் துணைவன்’ போன்ற மென்பொருள்களும் வெளிவந்து இன்றளவும் தமிழர்களின் பயன்பாட்டில் இருந்து வருகின்றது.
- குறளமுதம்
- இலக்கணம் கற்போம்
- திருக்குறள்
- ஆத்திசூடி
- புதிய ஆத்திசூடி
- தமிழ் இலக்கணம்
- அவலோகிதம்(யாப்பு மென்பொருள்)
- தமிழ் கற்போம் (மொழி பயிற்சி)
- திருக்குறள் உரைகள்
- தமிழ் தட்டச்சு குறுஞ்செயலிகள்
- தமிழ் கற்றல் கற்பித்தல் குறுஞ்செயலிகள்
- தமிழ் இலக்கண குறுஞ்செயலிகள்
- தமிழ் இலக்கிய குறுஞ்செயலிகள்
- தற்காலத்தில் கையடக்கக் கணினி, அலைபேசி ஆகியவை உலகில் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களிடத்தில் அதிகமாக பயன்பாட்டில் உள்ளது.
- உலகில் பல்வேறு இடங்களில் உள்ள வேறு மொழி பேசும் மக்களும் தமிழ் மொழியைக் கற்க ‘தமிழ் கற்றல் கற்பித்தல்’ குறுஞ்செயலிகள் பயன்படுகின்றன.
- அயல் நாடுகளில் வாழும் தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் பயிற்றுவிக்க இவ்வகை தமிழ் கற்பித்தல் மென்பொருள்கள் உதவுகின்றன.
- ஏட்டளவில் இருந்த இலக்கியங்களை எளிமையாக்கியது கணினித்தமிழ் ஆகும்.
- கணினி அனைவரின் கையிலும் இருப்பதில்லை ஆனால் அலைபேசி இன்று அனைவரின் கையிலும் உள்ளதால் இலக்கியங்கள் மென்பொருள் வடிவில் இருப்பதைவிட குறுஞ்செயலி வடிவில் உருவாகி அனைவரின் கையிலும் பயன்பட உதவியுள்ளது.
- தமிழ் இலக்கியங்கள் காலம் கடந்து சிறப்புற்று விளங்க இத்தகைய மென்பொருள்களும் குறுஞ்செயலிகளும் சிறப்பாக பங்காற்றுகின்றன.
- தமிழ் இலக்கியங்களை கைக்குள் அடக்கி வைத்துக்கொள்ளும் அளவிற்கு அறிவியல் தொழில் நுட்பம் தமிழ் மொழியை வளர்ச்சியடையச் செய்துள்ளது.
- அறிவியல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் முத்தமிழைத் தொடர்ந்து நான்காம் தமிழான கணினித்தமிழ் வளர்ச்சியடைந்து தமிழ்மொழியையும் வளர்ச்சியடையச் செய்துள்ளது.
- இரா.பன்னிருகை வடிவேலன், தமிழ் மென்பொருள்கள், நோக்கு வெளியீடு, சென்னை, முதற்பதிப்பு 2014, ப.78
- https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1659:2013-08-16-03-33-06&catid=42:2011-03-23-18-25-24.