மொழி கற்பிப்பதிலிருந்து மொழி கற்றலுக்கு வகுப்பு அறையில் இருந்து இணையத்திற்கு
முனைவர் ராஜேந்திரன் சங்கரவேலாயுதன்
அமிர்தா விஷ்வ விதியாபீடம் பல்கலைக்கழகம்
Summary
இரண்டாம் மொழி கற்பித்தலுக்கும் கற்றலுக்கும் பல்லூடகத்தின் பயன்பாடு இரண்டாம் மொழி கற்பித்தலுக்கும் கற்றலுக்கும் கணினியை அறிமுகம் செய்தன் மூலம் முக்கியத்துவம் அடைந்தது. பல்லூடகத்தின் அறிமுகம் கணிவழி மொழிக் கற்பித்தலை (CALT) குறைத்து, கணினி வழி மொழி கற்றலை (CALL) ஊக்குவித்தது. மொழி கற்பித்தலுக்கும் கற்றலுக்கும் மொழி ஆசிரியரின் பங்கு ஏறக்குறைய குறைக்கப்பட்டு இணைய வசதிகள் கொண்ட கணினி மொழி ஆசிரியர்களை இடம்பெயர்த்தது. மொழியை கற்றுக்கொள்வதில் இணையத்தின் பங்கு, பாரம்பரிய மொழி அறை சார்ந்த மொழி போதனையை இணைய அடிப்படையிலான மொழி கற்றலாக மாற்றியது.
இணைய அறிமுகத்திற்குப்பின் இணையம் வழி கற்றலும் கற்பித்தலும் மிகப்பரவலாக நடந்து வருகின்றன. ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கான இணையம் வழி மொழி கற்பித்தல்/கற்றல் செயல்பாடுகள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றன. தமிழைப் பொறுத்த வரையில் இணையம் வழி தமிழ் கற்றல் அல்லது கற்பித்தல் அதன் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. சென்னையிலுள்ள தமிழ் இணையக் கல்விக்கழகம் இணையம் வழி தமிழ்கற்பிக்கத் தன்னை ஆயத்தப்படுத்தி இணையம் வழி அயல்நாடுகளில் தமிழ்க்கற்றலை வளர்த்தலைச் செய்து வருகின்றது. இணையம்வழி தமிழ்க் கற்றலை வளர்க்கும் வழிமுறைகளை ஆயும் முன் உலகளாவிய அளவில் கணிவழி மொழி கற்றல்-கற்பித்தல் எவ்வாறு வளர்ச்சியுற்றது என்பதை அறிந்து கொள்வது கட்டாயம் ஆகின்றது. இவ்வகையிலான அறிமுகம் இக்கட்டுரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.